tamilnadu

img

பருவமழை சீராக பெய்யும்; அச்சம் வேண்டாம்

மேட்டுப்பாளையம்,ஜூன் 20-  தள்ளிப்போன பருவமழை சீராக துவங்கி தண்ணீர் பிரச்ச னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என்று கோவை வேளாண் பல் கலைக்கழக துணைவேந்தர் கல்யாணசுந்தரம் கூறியுள்ளார். மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: சென்னை உள்பட தமிழ கம் முழுவதும் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காதது குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் புயல் மற்றும் காற்றின் வேகம் காரணமாகவே தள்ளி போயிருப்பதாகவும் விரை வில் பருவமழை சீராக உள்ள தால் எதிர்பார்த்த மழை அளவு இருக்கும். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. வேளாண்மை படிப்புகளில் சேர கடந்தாண்டை விட நடப்பா ண்டில் 7000 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ள னர். ரேண்டம் எண்  ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று துணைவேந்தர் தெரி வித்துள்ளார்.