tamilnadu

img

ஆகஸ்ட் 31-ம் தேதிவரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கத்தடை:மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஊரடங்கு தளர்வு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுவருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மையங்கள், ஜிம்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்த மையங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.எனவும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.