tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக மாபெரும் இயக்கம் 400 கி.மீ. நடைபயணம்

மாதர் சங்கம் நடத்துகிறது

சென்னை, நவ. 21- பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும், போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் 400 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு லட்சக்கணக்கான மக்க ளோடு கலந்துரையாட உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க த்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தலைவர் எஸ்.வாலண்டினா ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் சென்னை யில் வியாழனன்று (நவ.21) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பெண்கள் மீதான, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் பல் வேறு வடிவங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் தேசிய குற்றப்பிரிவு காப்பகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் 2015ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு தமிழ கத்தில் வன்முறைகள் குறைந்திருப்ப தாக கூறுகின்றது. உண்மையில் வன் முறைகள் குறையவில்லை. பலவேறு வன்முறை வழக்குகளில் காவல்துறை புகாரை பெற்றாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைப்பதற்கே போராட வேண்டியுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டா லும் குற்றவாளிகள் கைது செய்யப்படு வதில் தாமதம் ஏற்படுகிறது. தமி ழகத்தில் வன்முறை வழக்குகளை பதிவு செய்வதில் காவல்துறையின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம். இதனால் பெண்கள் கடும் மன உளைச்ச லுக்கு உள்ளாகின்றனர். எனவே வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் காவல்நிலையம் சென்று புகார் அளிப்பதற்கு தயங்குகிறார்கள்.

பாதிக்கப்படும் குடும்பங்கள் அதிகரிப்பு

இதுபோன்ற குற்றங்களுக்கு முக்கியக் காரணமாக மது உள்ளது. போதை கலாச்சாரத்தால் தமிழகம், புதுச்சேரியில் பாதிக்கப்படும் குடும்பங் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயித்து அரசே மதுபா னங்களை விற்பனை செய்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் குறித்தோ, இளைஞர்களை சீரழிக்கும் போதை கலாச்சாரம் குறித்தோ அரசு கவலைப்படுவதில்லை. எனவே அரசு படிப்படியாக மதுபானக் கடைகளை மூடவும், அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேங்கிக் கிடக்கும்  பல லட்சம் வழக்குகள்

காதலிக்க மறுத்தால் படுகொலை, காதலித்தால் ஆணவப் படுகொலை, குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள், சைபர் கிரைம் குற்றங்கள் என பல லட்சம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஆனாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்களையே இழிவாக பார்க்கும் அவலநிலை தொடர்கிறது. இத்த கைய கருத்தியலை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள், பெண்ணு ரிமை அமைப்புகள் மட்டும் போராடி னால் போதாது. ஒட்டுமொத்த சமூகமும் இத்தகைய பெண்ணடிமைத்  தனத்திற்கு எதிராக போராட வேண்டும். அப்போதுதான் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் தைரிய மாக நீதிக்கான போராட்டத்தை நடத்து வார்கள்.

சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தன்று...

நவம்பர் 25 சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தன்று மாதர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் வடலூரில் துவங்கி பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையில் ஒரு குழுவும், திருவண்ணாமலையில் துவங்கி வேலூர், காஞ்சிபுரம் வழியாக மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் ஒரு குழுவும் 400 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு டிசம்பர் 3 அன்று சென்னை தாம்பரத்தில் சங்கமித்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு கலந்து கொண்டு போராளி களை கவுரவிக்க உள்ளார். இந்த நடை பயணத்தில் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு நீதிக்காக போராடிவரும் பெண்கள், அவர்களது குடும்பத்தினர், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பெண்ணுரிமை போராளிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் முன்னாள் நீதிபதி சந்துரு, கல்வியாளர் வசந்தி தேவி, மாதர் சங்க தலைவர்கள் உ.வாசுகி, சுதா சுந்தரராமன் கே.பாலபாரதி, வழக்கறிஞர் ஆர்.வைகை, வழக்கறிஞர் அருள்மொழி, அஜிதா, ஓவியா, மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன், திரை இயக்குனர்கள் லெனின் பாரதி, ராஜூமுருகன், முற்போக்கு எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, மருத்துவர் ஜெயராணி காமராஜ், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மஞ்சுளா, ஷீலு சுசிலா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான பெண்ணுரிமை - மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இரண்டு முனைகளில் இருந்து...

கடலூர் மாவட்டம் வடலூரில் துவங்கும் நடைபயணத்தை அரியலூர் மாவட்டம் இந்து முன்னணியைச் சார்ந்த மணிகண்டன் மற்றும் கூட்டாளிகளால் கூட்டு வல்லுறவு செயல்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் சகோதரி சிவரஞ்சனியும், திருவண்ணாமலை யில் துவங்கும் நடைபயணத்தை சேலம் ஆத்தூரில் தன் கண்ணெதிரிலேயே கொடூர மாக வெட்டி சாய்க்கப்பட்ட 4 வயது சிறுமி ராஜலட்சுமியின் தாயார் சின்னப்பொண்ணு கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள்.  டிசம்பர் 4 அன்று காலை ஒன்பது மணிக்கு தாம்பரத்தில் துவங்கி கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.