tamilnadu

img

’பேங்க் ஆன் வீல்ஸ்” சேவையை அறிமுகப்படுத்திய ஐஓபி!

வாடிக்கையாளர்களுக்கு ”பேங்க் ஆன் வீல்ஸ்” என்ற சேவையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.

”பேங்க் ஆன் வீல்ஸ்” என்பது ஒரு வாகனத்தில் வங்கி சேவைகள் வழங்கப்படும். இந்த வாகனங்களில் சிறிய ஏடிஎம்கள் இருக்கும். இதில் வாடிக்கையாளர்கள் வங்கியில் புதிய கணக்கு திறப்பதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தில் வாடிக்கையாளர்களை சேர்ப்பது, ஏடிஎம் வசதி, பாஸ்புக் பிரிண்ட் செய்வது, பணம் டெபாசிட் செய்வது உள்ளிட்ட வங்கி தொடர்பான சேவைகளும் செய்து தரப்படும். 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் 14 முக்கிய மாவட்டங்களில் மட்டும் முதலில் இந்த சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் கட்டமாக அமல்படுத்தியது. 

இதற்கு முன்பு ஒரு சில வங்கிகள், இந்த மொபைல் ஏடிஎம் சேவையை செய்து வந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இவ்வாறு மக்களுக்கு பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது முதியவர்களுக்கு மிக பயனுள்ளதாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிராமப்புறங்களுக்கு இது போன்ற சேவைகளை கொண்டு சேர்த்தால் மக்கள் மிகுந்த பயனடைவார்கள் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.