tamilnadu

img

5 மாவட்டங்களில் அண்ணா பல்கலைத் தேர்வு ஒத்திவைப்பு

மழை வெள்ளம் காரணமாக 5 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிற நிலையில், பெரும்பாலான பகுதிகளில் நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். 
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் நாகர்கோவில் மையத்தில் பதிவு செய்திருந்த மாணவர்களுக்கான தேர்வுகளும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.