உதகை, அக்.27 - உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் மசூதி அருகே உள்ள பாதாள சாக்கடை கால்வா யில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை பிங்கர் போஸ்ட் பகுதி மசூதி அருகே உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது. இதேபோல், இதன் மீது அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் மூடிகளும் உடைந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரி வித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, இந்த பாதாள சாக் கடை அடைப்பை உடனடியாக நீக்கி, கான் கிரீட் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.