உதகை, அக்.19- உதகையில் சாக்கடை கால்வாய் தோண்டும் பணி யின்போது, தடுப்புச்சுவர் சரிந்து விழுந்து இடி பாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உட்பட்ட மேரீஸ்ஹில் பகுதியில் சாக்கடை கால்வாய் தோண் டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென கால்வாயின் பக்கவாட்டில் இருந்த தடுப்புச்சுவர் மற்றும் மண் சரிந்து விழுந்துள் ளது. இதில் ரமேஷ் (40) என்ற தொழிலாளி இடி பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மற்ற தொழிலாளர்கள், இடிபாடுக் குள் சிக்கிய தொழிலாளியை மீட்கும் பணியில் ஈடு பட்டனர்.
ஆனால், அந்த முயற்சி பலனளிக்காததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தொழிலா ளியை உயிருடன் மீட்டனர். பின்னர், அவரை உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.