நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமாலினி, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ்கிருஷ்ணன், நஞ்சநாடு ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சசிகலா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.