ரவிசங்கர் பிரசாத் கண்டுபிடிப்பு
மும்பை,அக்.13- நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதற்கு திரை ப்படங்களின் வருமானமே சான்று என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். இந்த கருத்து சர்ச்சையையும் எதிர்ப்பை யும் ஏற்படுத்தியது. இந்நிலை யில அந்த கருத்தை அமைச்சர் திரும்பப்பெற்றார். மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அக்டோபர் 2-ஆம் தேதி வெளியான மூன்று திரைப் படங்களுக்கும் சேர்த்து அன்றைய தினம் 120 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக திரைப்பட வர்த்தக ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளதாக வும் இது நாட்டின் பொருளா தாரம் வலுவாக இருப்பதற்கு சான்று என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ஞாயி றன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று திரைத்துறை தலைநகரமான மும்பையில் தான் வெளி யிட்ட கருத்து சரியானது தான் என்றும் நமது திரைத் துறையினர் லட்சக்கணக்கா னோருக்கு வேலை வாய்ப் பளிப்பதோடு, நாட்டின் வரி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதாகவும் கூறி யுள்ளார். மேலும் தனது பேட்டியில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் மக்கள் சார்பு நட வடிக்கைகளையும் விளக்கி யிருப்பதாகத் தெரி வித்துள்ள ரவிசங்கர் பிரசாத், ஆனால் தனது கருத்துக்கள் திரிக்கப்பட்டிருபதாகவும் எனவே தனது இந்தக் கருத்தை திரும்பப்பெறுவ தாகவும் அவர் கூறியுள்ளார்.