நாமக்கல், ஜூன் 24- குமாரபாளையம் நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி சாலையில் ரேஷன் கடைக்குப் பொருட்கள் கொண்டு வந்த லாரி டயர் திடீரென சாலையில் புதைந்து விபத்துக்குள் ளானது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி சாலை கடந்த 6 மாதத் திற்கு முன்பு சீரமைக் கப்பட்டது. இந்நிலையில் திங்களன்று சத்யாபுரி பகுதியில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் கனரக லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அப் போது பள்ளியின் அருகே உள்ள சாலை யில் திடீரென லாரி டயர் புதைந்து பள் ளத்தில் சிக்கிக் கொண்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறிய தாவது, தரமான சாலை அமைக்காததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. சாலைகள் அமைக்கும் போது உரிய முறை யில் ஆய்வு செய்து தரமான சாலைகள் அமைக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உடனடியாக பழுதடைந்த சாலையை சரி செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.