புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பதிலடி
புதுச்சேரி, அக்.20- ஹெல்மெட் அணியாமல் சென்ற புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தினார். இதற்கு பதிலடி யாக, கிரண்பேடியும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நாராயணசாமி பதிலடி கொடுத் துள்ளார். புதுச்சேரி காமராஜ் நகரில் இருசக்கர வாக னத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் நாரா யணசாமி ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிகிறது.
முதல்வர் நாராயணசாமி ஹெல்மெட் அணி யாமல் சென்றதை சுட்டிக்காட்டி சமூகவலை தளத்தில் ஆளுநர் கிரண்பேடி பதிவு ஒன்றை பதிவிட்டார் அதில், ‘காமராஜ் நகர் பிரச்சா ரத்தின்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற முதல்-மந்திரி நாராயணசாமி மீது காவல்துறை தலைவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகை யில் நாராயணசாமி டிவிட்டர் பக்கத்தில், இரு சக்கரவாகனத்தில் செல்லும் போது ஆளுநர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவரிடமும் ஹெல்மெட் அணியுமாறு கிரண்பேடி கேட்டி ருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் நாராயணசாமி ஸ்கூட்டர் ஓட்டும் படத்துடன் டிவீட் செய்த ஆளு நர் கிரண்பேடிக்கு இருசக்கர வாகனத்தின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் கிரண்பேடி பயணிக்கும் படத்தை பதிவிட்டு நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார்.