tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திரண்ட மக்கள் பேரணி

தரங்கம்பாடி, பிப்.17- நாகை மாவட்டம், பொறையாறு ஆக்கூரில் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு முஸ்லிம் ஜமாஅத் நிர்வாக சபைத் தலைவர் எ.முஹம்மது சிஹாபுதீன் தலைமை வகித் தார். நிர்வாக சபை உறுப்பினர் சலாஹுதீன் முன்னிலை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமி ழன் பிரசன்னா, த.மு.மு.க. மாநில செயலாளர் சிவசாமி  முஸ்தாபா, மனிதநேய ஜன நாயக கட்சி காதர் பாட்ஷா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட செய லாளர் ரவிச்சந்திரன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். குடியுரிமை திருத்த சட்டத் தை திரும்ப பெற வலியுறுத்தி சிறுவர்கள் எழுச்சியுடன் பாடல்களை பாடி முழக்க மிட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர் கே. பி.மார்க்ஸ், கிளை செயலா ளர் சிவசுப்ரமணியன், ஆக்கூர் ஊராட்சி தலைவர்    சந்திரமோகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் சங்கை  தாஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஆக்கூர் முக்கூட்டு தேசிய நெடுஞ்சா லையிலிருந்து தேசியக் கொடியுடன் 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இஸ்லாமி யர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சியை சார்ந்தவர் கள் கண்டன பதாகைகளை ஏந்தி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலி யுறுத்தி பேரணியாக சென்ற னர். சதி, மத பாகுபாடின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தஞ்சாவூர்: இதே போல் தஞ்சை மதுக்கூர் பெரிய பள்ளிவாசல் அருகில் அனைத்து ஜமாஅத் கூட்ட மைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட ஏராள மானோர் பங்கேற்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமா னோர் ஆதரவு தெரிவித்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் நேரில் ஆதரவு தெரிவித்து பேசினார்.