tamilnadu

img

போடி ஆற்றில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்

போடியில் பிச்சைக்கரை ஆற்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தேனி மாவட்டம் போடியில் உள்ள பிச்சைக்கரை ஆற்றில் 10க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் கொட்டப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அரிசி மூட்டைகளை ஆற்றில் கொட்டிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.