tamilnadu

img

தலித் பெண் பாலியல் படுகொலையை கண்டித்து தேனியில் ஆர்ப்பாட்டம்....

தேனி:
உத்தரப்பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்துதமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்தியத் தொழிற் சங்க மையம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் படுகொலையில் ஈடுபட்டகுற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பழங்குடி, தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டஊராட்சித் தலைவர்களை பணி செய்யவிடாமல் தடுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட் டது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிக சங்க பொதுச்செயலாளர் செயலாளர் பெ.சண்முகம், சிஐடியு மாவட்டச் செயலாளர்எம்.ராமச்சந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டத் தலைவர் டி. தயாளன், மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வெண்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர்எம்.வி. முருகன், சிஐடியு மாவட்டத் தலைவர்சி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.