தேனி, ஆக.30- குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரியும் நபர்கள் மீது குண் டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கப்படும் என திண் டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்எஸ்.முத்துச்சாமி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான வன்முறைக்கு எதி ரான விழிப்புணர்வு முகாம் தேனி அன்னஞ்சி விலக்கு அருகே நடை பெற்றது. காவல் கண்காணிப்பாளர் இ. சாய்சரண்தேஜஸ்வி தலைமை வகிக்க, மாவட்ட சமூகநல அலு வலர் சண்முகவடிவு முன்னிலை வகித்தார். திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்எஸ். முத்துச்சாமி சிறப்பு அழைப்பா ளராக கலந்துகொண்டு, பெண் கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களை தடுக்கும் பணி யில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் தன்னார்வ லர்களுக்கு பாராட்டு சான்றி தழ்கள் வழங்கி பேசினார். அவர் பேசும்போது: நாட்டை பாதிக்கும் மிகப் பெரிய குற்றமாக குழந்தை களுக்கு எதிரான குற்றங்களை பார்க்க வேண்டும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் அனைவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்தி யாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் 3-ல் ஒரு பங்கு இளம் குற்றவாளிகளாக உள்ளனர். எனவே குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தனிக்கவ னம் செலுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார் வந்தால் உடனடியாக மனு ரசீது வழங்க வேண்டும். தாமதமின்றி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார். குழந்தைகள் மற்றும் பெண் களுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து சைல்டு லைன் மாவட்ட இயக்குனர் முகமது சேக் இப்ரா கிம், ஒருங்கிணைப்பாளர் மஞ்சு ஆகியோர் பேசினர். முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட குழந் தைகள் நல அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட குழந்தை கள் நலக்குழு தலைவர் சுரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.