தேனி, ஆக.3- சின்னமனூர் ஒன்றியம் புலிகுத்தி ஊராட்சியில் அங்கீகாரமற்ற வீடு களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கியதில் ரூ 4 லட்சம் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி சம்பந்தப் பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புலிகுத்தி ஊராட்சியில் 160-க்கும் மேற்பட்ட அங்கீகாரமற்ற வீடுகளுக்கு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடு தலாக ஊராட்சித் தலைவர் சுப்புராஜ் வசூல் செய்துள்ளார். வீடு ஒன்றுக்கு 6,000 ரூபாய் வீதம் பெற்றுக்கொண்ட ஊராட்சி நிர்வாகம் ரூ.3,840-க்கு மட் டுமே ரசீது கொடுத்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கிராம மக்கள் சார்பில் புகார் மனு அனுப்பியதோடு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
அதேபோல குழாய் இணைப்பு பெற்ற பயனாளிகள் தங்களுக்கு தர வேண்டிய பாக்கி பணத்தை வாங்கித் தரக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பிஇருந்தனர். ஆட்சியரின் உத்தரவின்பேரில் அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு அதிகாரிகள் கூடு தலாக வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பித் தர உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஊழல் -முறை கேட்டில் ஈடுபட்ட ஊராட்சித்தலைவர் சுப்புராஜ், உடந்தையாக இருந்த சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலு வலர் தனலட்சுமி, ஊராட்சி செயலா ளர் குமரேசன் ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி சின்ன மனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பி. ஜெய ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சின்னமனூர் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், சின்ன மனூர் நகர் செயலர் எஸ்.பொம்மை யன், எஸ்.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.