tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை அதிமுக நிர்வாகி கைது

போடி, மே 28-  போடி அருகே இரண்டரை வயது சிறு மிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. நிர்வாகி புதன்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். போடியை அடுத்த கோம்பையில் இரண் டரை வயது பெண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப் போது அதே பகுதியைச் சேர்ந்த கணே சன் (61) என்பவர் பிஸ்கட் வாங்கித் தரு வதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென் றுள்ளார். பின்னர் திரும்ப குழந்தையை வீட்டில் விடச் சென்றபோது குழந்தைக்கு காயங் கள் இருந்தது கண்டு விசாரிக்கவே குழந் தையை கணேசன் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து தேன் மொழி என்பவர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் கணே சனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட கணேசன் அ.தி.மு.க. கோம்பை பேரூராட்சி கிளைப் பொருளா ளர் ஆவர்.