தென்காசி, ஜூன் 23- தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 261 ஆக உயர்ந்துள்ளது. இவர்க ளில் 108 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 153 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்டத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வந்த 204 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2615 பேர், சென்னை நீங்கலாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 2605 பேர், சென்னையில் இருந்து வந்த 3379 பேர் என மொத்தம் 8803 பேர் வெளியிடங்களில் இருந்து வந்துள்ள னர். இவர்களில் 7664 பேர் வீடுகளில் தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு கோவிட்-19 மையங்களில் 1139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 14, 511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
செவ்வாயன்று மட்டும் 387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 31 பேர், வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 108 பேரும் அடங்குவர். முழுமையாக குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. 153 பேர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப் பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.