tamilnadu

img

சிபிஎம் போராட்டம் வெற்றி: சமாதானக் கூட்டத்தில் கீழப்பாவூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதி

தென்காசி, ஆக.13- தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மா ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பேரு ராட்சி முன்பு   காணாமல் போன பூங்கா  ஓடை தெருவை கண்டுபிடித்து தரக் கோரி யும், சாக்கடை கழிவுநீரை தடையின்றி வெளி யேற்றிட கோரியும், குடிநீரை தினசரி வழ ங்கிட கோரியும் ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.கருப்பசாமி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்தில், கீழப்பாவூர் பேரூ ராட்சி அலுவலர் கண்மணி தலைமையில் சமா தானக் கூட்டம் நடைபெற்றது.  கீழப்பாவூர் கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயற்குழு  உறுப்பினர் தி.கணபதி,  மாவட்ட குழு உறுப்பினர் எம்.வேல்முருகன், ஒன்றிய செயலாளர் எம்.தங்கம், ஒன்றிய குழு  உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுவது, அந்த தெரு வை துப்புரவு  பணியாளர்களை கொண்டு சுத்த ப்படுத்துவது, சாலை அமைக்க நடவ டிக்கை எடுப்பது, கீழப்பாவூர் நகர் பகுதியில்  சீராக குடிநீர் வழங்குவது என எழுத்து பூர்வ மாக முடிவு ஏற்பட்டது. இதை அப்பகுதி பொது மக்கள் ஏற்று கொண்டனர். இதனால் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் வெற்றி பெற்றது.