tamilnadu

ஸ்டெர்லைட் தீர்ப்பு தூத்துக்குடி மக்கள் வரவேற்பு - இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி, ஆக.18- உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா முன் பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன் உள்ளிட் டோர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். அப்போது அவர்கள் கூறுகை யில், இந்த தீர்ப்பு மகத்தான தீர்ப்பு. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வர வேற்றுள்ளனர். 13பேரின் உயிர்த்தியாகம் வீண்போகவில்லை. இந்த தீர்ப்பை முன்வைத்து ஸ்டெர்லைட் ஆலையின் அடிக்கல் உட்பட அனைத்தையும் அப்புறப் படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்றால், தமிழக அரசு மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்று மதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அப்போது அவர்கள் கூறுகையில் இந்த  தீர்ப்பு வைகோவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தனர். பட்டாசு வெடிக்க போலீசார் எதிர்ப்பு ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் தீர்ப்பு எதிரொலியாக தூத்துக்குடி பாளை ரோட்டில் ராஜாஜி பூங்கா முன்பு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி கணேஷ் முன்னிலையில் எராளமான போ லீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அணி அணி யாக வந்து பட்டாசு வெடித்தவண்ணம் இருந் தனர். இதையடுத்து போலீசார் அவர்களி டம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் ஸ்டெர்லைட் எதிர்ப்பா ளர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.