tamilnadu

வீட்டின் உரிமையாளர் எரித்துக் கொலை... வாலிபர் வெறிச்செயல்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வீட்டை காலி செய்ய வைத்தால் வீட்டின் உரிமையாளரை, இளைஞர் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவரது8 வயது மகன் படுகாயம் அடைந்தான். 9 பைக்குகள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில், கிளியோபாட்ரா தியேட்டர் அருகில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டில் 20 வீடுகள் உள்ளன. இங்குள்ளஒரு வீட்டில் நடராஜன் மகன் அண்ணாமலை (42) என்பவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அந்த காம்பவுன்டில் குடியிருந்த நசரேன் மகன் மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் (46) என்பவர் அடிக்கடிமதுகுடித்துவிட்டு வந்து அங்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார்.இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவரை வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த அவர் திங்கள் இரவு 11 மணியளயவில் குடிபோதையில் அங்கு வந்துதகராறு செய்துள்ளார். மேலும் காம்பவுண்டிற்குள் நிறுத்தியிருந்த பைக்குகளுக்கு தீவைத்துள்ளார். இதில் 9 பைக்குகள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. மேலும் அண்ணாமலை வீட்டிற்குள் தீபரவியது. தூங்கிக் கொண்டிருந்த அண்ணாமலை தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்ததீவிபத்தில் அவரது மகன் நித்தின் (8) காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மாடியில் உறங்கியதால் அவரது மனைவி கங்கா தேவி மற்றும் மற்றொரு மகன் நிகில் (6) உயிர்தப்பினர். தூங்த துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீஸ்இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மரிய அந்தோணி தினேஷ் மென்டிஸ் மீது கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ளஅவரை போலீசார் தேடி வருகின்றனர்.