தூத்துக்குடி:
விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் கனிமொழி எம்பி, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜூணன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகே காங்கிரஸ் காரிய கமிட்டி துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் முரளிதரன், மதிமுக மாநகரசெயலாளர் முருகபூபதி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அகமது இக்பால், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி தாளமுத்து நகரில் திமுக ஒன்றிய செயலாளர் மாடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சங்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாளமுத்து நகர் கிளை செயலாளர் அந்தோணி சௌந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மகாராஜன், திமுக நிர்வாகிகள் ஊராட்சி தலைவர் ஆர் சரவணகுமார், திமுக தொழிற்சங்க தலைவர் ஜோதி ராஜா, சிபிஎம் தாளமுத்து நகர் செயலாளர் அம்மமுத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம்காமராஜர் சிலை முன்பு திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை ஜோதிபுரம் கடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப்தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன், பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில குழு உறுப்பினர் பூ.கோபாலன், இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன், மதிமுக மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் மற்றும் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தாழையூத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நிர்வாகி பேச்சி பாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லை தாலுகா செயலாளர் சுடலைராஜ், காங்கிரஸ் சார்பில் மீராகனி, சிபிஎம் கௌதம், சுடலைமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். மானூரில் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.கே.செந்தில், மணிசுடலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்காசி
வாசுதேநல்லூரில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார் (மதிமுக) தலைமை வகித்தார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், திமுக சார்பில் வாசு நகரச்செயலாளர் ஆ.சரவணன், மதிமுக நகரச் செயலாளர் பாசறை.கணேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் இரா.நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ப.சுப்பையா ம.மருதையா, கிளைச் செயலாளர்கள் இரா.ராஜகோபால், மீனாட்சிராஜ் சிபிஐ ஒன்றியத் துணைச்செயலாளர் முருகன், காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ந.நாகராஜன், நகர காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், விசிக ஒன்றியச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலங்குளம், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் என்.சுரேஷ் ராஜன்தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் ஆர்.இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் பேசினர்.மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், எம்.அகமது உசேன், கே.தங்கமோகன், உஷா பாசி, கே.மாதவன், சட்டமன்றஉறுப்பினர்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், திராவிட கழக நிர்வாகி வெற்றிவேந்தன் உட்படஅனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அருமனை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிற்றார் ரவிச்சந்திரன் தலைமைவகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர், காங்கிரஸ் நிர்வாகி டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் பேசினர். மாவட்டத்தில்சுமார் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.