tamilnadu

புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியத்துடன் வங்கி கடன்

 திருவாரூர், ஆக.9- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு, குறு விவ சாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத  மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பத்தாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி சிட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் திருவா ரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.