திருவள்ளூர், அக்.3- திருவள்ளூர் மாவட்டம், பாப்பன்குப்பம் கிராமத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் ஆலை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழ னன்று (அக்.3) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகை, பாப்பன்குப்பம், பழம்பாளையம், போடி ரெட்டி கண்டிகை, சிந்தல குப்பம் உள்ளிட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலம், நீர், காற்று மாசடைந்துள்ளது. மேலும் எதிரே வரும் நபரின் உருவம் தெரியதா அளவிற்கு நச்சுப் புகை சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி கிராம மக்கள் மாசடைந்த காற்றையே சுவாதித்து வருகிறார்கள். இந்நிலையில் கும்மி டிப்பூண்டி பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொண்டு, அதனை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் ஆலையை பாப்பன் குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இந்நிலையில் குப்பை யின் தரம் பிரித்து தயாரிக்கும் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு வியாழனன்று (அக்.3) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர் பி.கருணாமூர்த்தி, மூத்த தலைவர் சி.ஆறு முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.