tamilnadu

குடிநீர், மின் இணைப்பு கேட்டு வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு

திருவள்ளூர், ஆக. 1- இருளர் இன மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் கோரிக்கை மனு அளித்த னர். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் சென்றா யன்பாளையம் ஊராட்சியில் கல்லாங் குட்டை புறம்போக்கு நிலத்தில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர், மின் விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் எதுவும் இல்லை. இவர்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பல முறை அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். இந்நிலையில் வியாழனன்று (ஆக.1) பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு கோரிக்கை மனு வழங்கி னார். மனுவை பெற்று க்கொண்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார்.