திருவள்ளூர், ஜூலை 22- திருவள்ளூர் நக ராட்சிக்கு உட்பட்ட எடப் பாளையம், நேதாஜி சாலை, தாசினி கோட்டை தெரு, கட்ட பொம்மன் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ளவர்க ளுக்கு தாசினி கோட்டை தெருவில் நியாயவிலை கடை அமைந்துள்ளது. இந்த கடையில் 1267 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்க கூடிய சலவை தொழிலாளி, கீரை விற்பவர்கள், தினக் கூலிகள் ஆகியோர் வறுமை கோட்டிற்கு மேல் வசதியாக வாழும் குடும்பங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை யற்ற குடும்ப அட்டையை (என்பிஎச்எச்) வழங்கியுள்ள னர். இதனால் சாமான்ய மக்களுக்கு கிடைக்க வேண் டிய 5-கிலோ கொண்டக் கடலை, ஒன்றிய அரசு வழங்கும் 10கிலோ அரிசி கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு வழங்கும் அனைத்து சிறப்பு மானிய பொருட்களும் கிடைக்கும் வகையில் முறை யாக விசாரணை செய்து அனைவருக்கும் முன்னு ரிமை குடும்ப அட்டையான பி.எச்.எச் அட்டையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் என்.கீதா தலைமையில் வியாழனன்று (ஜூலை-22) திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுகொண்ட வட்டவழங் கல் அதிகாரி கோரிக்கை மனுவின் மீது இரு வாரத் துக்குள் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் சிபிஎம் கிளை செயலாளர் எஸ்.செந் தில்குமார், மாதர் சங்கத்தின் கிளை செயலாளர் எஸ்.மோகனா, மற்றும் வி.உமா ஆகியோர் கலந்துகொண்ட னர்.