திருவண்ணாமலை, ஜன.27- திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கத்தை அடுத்த பழங்கோயில் கிராமத்தில் வசிக்கும் அருந்ததிய இன மக்களுக்கு இல வச வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர். திங்க ளன்று(ஜன.27) மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் வந்த கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ள தாவது:- எங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு 18 தொகுப்பு வீடுகள் தமிழக அரசால் வழங்கப் பட்டது. அந்த வீடுகள் சிதிலமடைந்துவிட்டது. குடும்பங்களின் பெருக்கம் அதிகமாகி விட்டதால், ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் வசிக்க வேண்டிய சூழல் உள்ளது. இத னால், இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், நாங்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு, அருகிலுள்ள புறம் போக்கு இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும், கழிவுநீர் வெளியேற வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.