திருவண்ணாமலை, ஜுலை 16- திருவண்ணாமலை மாவட்டம் சாத்த னூர் நீர்த்தேக்கத்தில் மீன் வளர்ப்பு பணி களை அரசே ஏற்று நடத்தக் கோரி செங்கம் பேருந்து நிலையம் அருகே சாத்தனூர் அணை மரபுசார் மீன்பிடி தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலா ளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாத்தனூர் உள்ளிட்ட 17 கிராமங்களில் மீன் பிடிக்கும் மக்களுக்கு புதிதாக மீனவர் கூட்டு றவு சங்கத்தை ஏற்படுத்த வேண்டும், காவல் துறை மற்றும் வனத்துறை நிர்வாகம், குத்தகை தாரருக்கு ஆதரவாக பொய் வழக்கு போடு வதை கைவிட வேண்டும், பொது மக்களை அடித்து உதைத்து, பொருட்களை பறிமுதல் செய்யும் மீன் குத்தகைதாரரின் அடியாட்கள் மீதான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.