திருப்பூர், அக். 15 – கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தைப் பாதுகாப்பதற்கு நாடு முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களிடம் ஒரு கோடி கையெழுத்துப் பெறும் இயக்கம் திருப்பூரில் செவ்வாயன்று தொடங் கப்பட்டது. மத்திய அரசு 44 தொழிலாளர் உரிமை மற்றும் தொழிற்சாலை சட்டங்களை 4 சட்டத் தொகுப்பு களாக சுருக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தொழில்ரீதியான உடல் நலம், பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு, கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சட்டம் 1996 உள் ளிட்ட 13 சட்டங்களை ஒன்றாக் கியுள்ளது. இதுகுறித்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தேர்வுக்குழு வின் பரிசீலனைக்குச்சென்றுள் ளது. இத்தகைய சட்டத்தொகுப்பு சட்ட வடிவம் பெறுமானால் நாடு முழுவதும் 36 மாநில, யூனியன் பிரதேச கட்டுமானத் தொழிலாளர் நலவாரியங்கள் கலைக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் ஏற்கெனவே நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 4 கோடி கட்டு மானத் தொழிலாளர்களின் பதி வும் ரத்தாகிவிடும். மேலும் நல வரியாக திரட்டப் பட்ட ரூ.42 ஆயிரம் கோடியில், ரூ.12 ஆயிரம் கோடி மட்டுமே தொழிலாளர்களுக்கு பணப் பய னாக வழங்கப்பட்டுள்ளது.எஞ் சிய ரூ.30 ஆயிரம் கோடி நல வரி, இந்த சட்டத் தொகுப்பின் காரண மாக மத்திய அரசின் கட்டுப்பாட் டிற்குக் கொண்டு செல்லப்பட்டு பங்குச் சந்தையில் முதலீடு செய் யப்பட்டு விரயமாகும். எனவே கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தையும், நலவாரியத்தில் தொழிலாளர் வழங்கிய நல வரி யையும் பாதுகாக்க நாடு முழுவ தும் ஒரு கோடி கட்டுமானத் தொழி லாளர்களிடம் கையெழுத்துப் பெறுவது, அதை டிசம்பர் 5ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக நடத்தி, நாடாளு மன்ற சபாநாயகரிடம் கையெ ழுத்துகளுடன், கோரிக்கை மனுக் களை ஒப்படைப்பது என்று சிஐடியு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், திருப் பூர் வெள்ளியங்காடு நால் ரோடு பகுதியில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்தை சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயாலாளர் டி.குமார் துவக்கி வைத்தார். இதில் கட்டுமான சங்க நிர்வாகிகள் ரமேஷ், ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் கே.பொம்முதுரை வாழ்த்திப் பேசி னார். இதில் அதிகாலை வேலைக் குச் செல்வதற்காக வெள்ளியங் காடு நால் ரோடு பகுதியில் திரண்டி ருக்கும் கட்டுமானத் தொழிலா ளர்களிடம் நலவாரியத்தின் பலன் கள் பற்றி எடுத்துக் கூறி, நலவாரி யத்தைப் பாதுகாக்க கையெழுத் துப் பெறப்பட்டது. சுமார் இருநூற் றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் இதில் கையெழுத்திட்டனர்.