tamilnadu

img

உடுமலை அரசுப் பள்ளி சுவரில் காவி உடையில் திருவள்ளுவர் படம்!

உடுமலைப்பேட்டையில் அரசுப் பள்ளி சுவரில் காவி உடையில் திருவள்ளுவர் படம் வரையப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தெய்வசிகாமணி பட்டிணம் பகுதியில் இருக்கும் பழனியாண்டவர் மில்ஸ் நகராட்சி துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரில் நாட்டின் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டு இருந்தன. அதில் அரசு விதிகளின்படி இருக்க வேண்டிய திருவள்ளுவர் படம், காவி உடையில் வரையப்பட்டு இருக்கிறது. இது திருவள்ளுவரின் மீது மதச்சாயத்தை பூசும் நோக்கம் என சமூக ஆர்வலர்கள் வலுத்த கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.