திருப்பூர், செப். 9- திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சீரமைக்கப்ப டாத சாலைகளால் தொடர் விபத்து ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் நூதன முறையில் தலை, கைகளில் கட்டுப் போட்டு, சாலை களைச் செப்பனிட வலியு றுத்தி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைதிட்ட பணிகளுக்கு சாலை கள் தோண்டப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெற்ற பணி கள் முழுமையாக நிறைவடையாத நிலை யில், பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. சமீப நாட்களாக மழையும் பெய்து வரும் சூழலில் தெரு விளக்குகளும் பழுதடைந் துள்ளன.
இதனால் இருள் சூழ்ந்த மோசமான சாலைகளில் ஏராளமான விபத்துகுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாலையைச் சீர மைக்க வேண்டும். தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி இடுவமுபாளையம் பகுதி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.