திருப்பூர், ஆக. 8 – துப்பாக்கி முனையில் அரசி யல் அமைப்புச் சட்டத்தைச் சீர் குலைத்து காஷ்மீர் மாநிலத்தைத் தகர்த்த மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட வழக்கறி ஞர்கள் சார்பில் புதனன்று காலை திருப்பூர் கோர்ட் வீதி, நீதிமன்ற வளாகத்தின் வாயில் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ். பொன்ராம் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்டம் அரசியல்வாதிகளின் கைத்த டியா?, அழகிய காஷ்மீர் கார்ப் பரேட்டுகளின் வேட்டைக்காடா? துப்பாக்கி முனையில் மிரட்டாதே, காஷ்மீர் மக்களை ஒடுக்காதே!, மக்கள் கருத்தை மதிக்காமல் ஜன நாயகம் படுகொலையா? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை களை வழக்கறிஞர்கள் ஏந்தியிருந் தனர். மத்திய அரசின் சர்வாதிகார நடவடிக்கையைக் கண்டித்து திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த விவேகானந்தன், மதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கந்தசாமி, வழக்கறிஞர் வி.கே.சுப்பிரமணியம் ஆகியோர் உரை யாற்றினர். இதில் திரளான வழக் கறிஞர்கள் பங்கேற்றனர். முடிவில் அகிலஇந்திய வழக்கறி ஞர் சங்க மத்தியக்குழு உறுப்பி னர் அ.மணவாளன் நன்றி தெரி வித்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.