tamilnadu

img

மின் கம்பத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, ஜூன் 8- அவிநாசி அடுத்த கருவ லூரில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மிகவும் பழு தடைந்து  கீழே விழும் நிலை யில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். அவிநாசி ஒன்றியம், கரு வலூர் ஊராட்சியில் காளி பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இரண்டு மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து கீழே  விழும் நிலையில் உள்ளது.  இதனால் பள்ளிக் குழந்தை களுக்கும், அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். மேலும் கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற் படும் அபாயமும் உள்ளது. எனவே பழு தடைந்த மின் கம்பத்தை மின்சார வாரியம்  உடனடியாக மாற்றியமைக்க பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.