திருப்பூர், ஜூன் 29 – கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாத காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள் ளப்பட்டதாக திருப்பூர் மாவட்டத் திற்கு அரசு நியமித்துள்ள சிறப்புக் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் கே.கோபால் கூறினார். திருப்பூர் ஜெய்வாபாய் பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டி ருந்த தற்காலிக மருத்துவமனையை சிறப்பு அலுவலர் கே.கோபால் திங்க ளன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் நோய் தொற்றின் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத் தில், தற்போதுள்ள 26 கட்டுப்பாட்டு மண்டலங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் சுகாதாரப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இம்மாவட்டத்தில் 150 நபர்கள் கொரோனா பாதிக்கப் பட்டு அவர்களில் 117 நபர்கள் சிகிச்சை முடிவுற்று தங்களது வீடு களுக்கு திரும்பியுள்ளனர். மீத முள்ள நபர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது. சுமார் 3000 நபர்கள் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப் பட்டு தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துமனைகளில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.மேலும்,மாவட்டத்தி லுள்ள 9 வட்டங்களிலும் கூடுதல் படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக மருத்துமனைகள் அமைக் கப்பட்டுள்ளது.
இங்கு வெண்டி லேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள் ளது. எனவே பொதுமக்கள் அனைவ ரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசங்களை அணிந்து தனிமனித இடை வெளியை முழுமையாக கடைபி டிப்பதுடன், கிருமி நாசினிகளை கொண்டு தங்களது கைகளை சுத்த மாக வைத்துக்கொள்ள வேண்டும் என கோபால் தெரிவித்தார். முன்னதாக, பல்லடம் சாலை தென்னம்பாளையம் மற்றும் காங் கயம் சாலை அமர்ஜோதி நாரயண சாமி நகர் ஆகிய பகுதிகளில் அமைந் துள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள், தாராபுரம் சாலை வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் அமைக்கப் பட்டிருந்த 50 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனையையும், அரசு மருத்துவக் கல்லூரியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய் தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுட னான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.