அவிநாசி, பிப். 15- அவிநாசி அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளியன்று சுற்று சூழலியல் மன்றத் தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை வேளாண் அறிவியில் நிறுவன இயக்குநர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார். இதில் மரம் நடுதல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், நீர்மேலாண்மை, மூலிகை தோட்டம் அமைத்தல், விதைப்பந்துகள் அமைத்தல், மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாத்தல், தாவர வளங்களைக் காப்பதால் புவி வெப்பமாவதைத் தடுத் தல், விலங்குகளின் அவசியம், மழை நீர் சேகரிப்பு, மண்வளத்தைப் பாதுகாத்தல், நெகிழி மற்றும் துரித உணவுகளை கட்டுப்படுத்துதல், பழங்குடியினர் முன்னேற்றம், வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள மாணாக்கர்களுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி அளித் தல், தொழில் முனைவோரை உருவாக்குதல், இயற்கை இடர்பாடுகள் வரும் நேரத்தில் மக்களுக்கு உதவுதல் போன்ற பணிகளை இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் மன்றம் முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக முனைவர். அலிமாபி (எ) ஷகிலாபானு நன்றியுரை வழங்கினார்.