tamilnadu

திட்டமிடாத ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியால் போக்குவரத்து நெரிசல்: ஆணையருக்கு சிபிஎம் கடிதம்

திருப்பூர், அக். 27 - திருப்பூர் மாநகரின் மையப் பகுதிகளில் முன்திட்டமிடல் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் செய்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்கள் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், திருப்பூர் மாநக ராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:  திருப்பூர் மாந கரத்தில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) என்ற பெயரில் பணிகள் நடைபெற்று வரு கின்றன.

குறிப்பாக திருப்பூர் மாநகரின் மையப் பகுதியில் கடைவீதிகள் உள்ள பூ மார்க்கெட் பகுதி, பெருமாள் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அரிசிக்கடை வீதி, நொய்யல் வீதி, பெரியகடை வீதி  ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் சாலை யைத் தோண்டுவதும், சாக்கடைகளை இடித்து கட்டுவதும், வடிகால் பாலம் கட்டு வது போன்ற பணிகள் நடக்கின்றன.  இதனால் இப்பகுதியில் மக்கள் சென்று வருவதும், வர்த்தக நிறுவனங்களுக்கு, கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வரு வது போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் அரசு பேருந்துகள் அதிகமாக செல்லும் கருவம் பாளையம் ஏபிடி ரோடு, மின்மயானம் செல் லும் ரோடு, மினி பஸ்கள் செல்லும் புஷ்பா நகர் மெயின்ரோடு, பெரிச்சிபாளையம் பஸ் நிறுத்தம், தெற்கு காவல்நிலையம் எதிரில் சிக்னல் அருகில், அணைக்காடு ரோடு, மின் மயானத்திலிருந்து வடபுறம் ஊத்துக்குளி ரோடு வரை செல்லும் சாலை என பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதைப்பற்றி மாநக ராட்சி நிர்வாகமோ, நெடுஞ்சாலைத் துறையோ கண்டு கொள்ளமால் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  அதேபோல் நொய்யல் வீதி,  ஜெய்வா பாய் பள்ளி வீதி உள்ளிட்ட இடங்களில் 6 அடி உயரத்தில் கட்டப்பட்ட சாக்கடைகள் ரோட்டின் மட்டத்தை விட, இரண்டு அடி மேலே  உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் ரோடு மற்றும் வீடுகள், கட்டிடங்கள், சாக்க டையை விடத் தாழ்வாக போய்விட்டன. கழிவு நீரோ, மழைநீரோ அதிகரித்தால்  சாக்கடையில் செல்லாமல் ரோட்டில் தேங்கி நிற்கும் அல்லது வீதியோரம் வீட்டிற்குள் புகுந்து சுகாதாரா சீட்கேட்டை ஏற்படுத்தும் நிலை ஏற்படும்.

எனவே மாநகராட்சி நிர்வாகம் மேற்படி பகுதியில் கட்டப்பட்ட சாக்கடைகளை ஆய்வு செய்து, வீடுகளின் மட்டத்திற்கு தகுந்த மாதிரி உயரத்தை குறைத்தும், தரைப்பகுதி ஆழத்தை அதிகரிக்க வேண் டும். மேற்படி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை உடனடியாக பராமரித்திட வும்,  கடை வீதியில்  மூன்று வீதிகளிலும் நடைபெறும் சாக்கடை கால்வாய் பணி யினை விரைவாக முடித்திடவும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் திருப்பூர் தெற்கு மாந கரக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.