திருப்பூர், செப்.19- பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் புதன்கிழ மையன்று பொங்கலூர் ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பொங்கலூர் ஒன்றியம் வலைய பாளையத்தில் தொடங்கி துத்தாரிபாளையம், கள்ளிப் பாளையம், வடுகபாளையம், எல வந்தி, கேத்தனூர், மந்திரிபாளை யம், வாவிபாளையம், கொச வம்பாளையம், பழனிக்கவுண் டம் பாளையம், சாலையூர், கெரட முத்தூர், வடமலைபாளையம், புத்தரச்சல், கெங்கநாயக்கன் பாளையம், திருமலைநாயக்கன் பாளையம், காட்டூர், காட்டூர் புதூர், கொடுவாய், கோட்டை மேடு, நாகலிங்கபுரம், செல்லப் புள்ளபாளையம், கொசவம் பாளையம், முதியாநெரிச்சல், கண்டியன்கோவில், பூசாரி பாளையம், மருதுரையான் வலசு, மீனாட்சி வலசு, தங்காப்புதூர், பி.ஆண்டிபாளையம், நாச்சி பாளையம், திருக்குமரன் நகர், ரங்கபாளையம், மணியம்பாளை யம், கரியாம்பாளையம், கவுண் டம்பாளையம், பெருந்தொழுவு, கரட்டுப்புதூர், கரட்டுப்பாளை யம், சேமலைக்கவுண்டம் பாளையம், அலகுமலை, கைகாட்டி, குமாரபாளையம், மசநல்லம்பாளையம், தொங்குட் டிபாளையம், டி.ஆண்டிபாளை யம், கே.ஆண்டிபாளையம், வேலம்பட்டி, பொல்லிகாளி பாளையம், நல்லகாளிபாளையம், காட்டுப்பாளையம், தேவனம் பாளையம், சக்திநகர், பொங்க லூர், மாதப்பூர் ஆகிய 56 கிரா மங்களில் பி.ஆர்.நடராஜன் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த பயணத்தின்போது சென்ற இடங்களில் எல்லாம் தோழமைக் கட்சியினருடன், அந்த கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள், பெண்கள் பி.ஆர்.நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், துண்டு, சால் வைகள் அணிவித்தும் அவருக்கு வரவேற்புக் அளிக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களும் அளிக் கப்பட்டன. குறிப்பாக வீட்டு மனைப் பட்டா, குடிநீர் வசதி, சாலை, சாக்கடை வசதி உள் ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனர். நல்ல காளிபாளையம் பகுதியில் சாயக்கழிவு கொட்டப்பட்டி ருந்ததையும் பார்வையிட்ட அவர் இது குறித்து அரசு நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக வும் தெரிவித்தார். இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்டும், வரவேற்புக்கு நன்றி தெரிவித்தும் பி.ஆர்.நடராஜன் பேசும்போது, தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து மார்க் சிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தன்னை மகத்தான வெற்றி பெறச் செய்த வாக்கா ளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், ஏழை, எளிய சாமா னிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தன்னால் ஆன பணி களை நிச்சயம் செய்வேன் என் றும் உறுதியளித்தார். முன்னதாக, இந்த சுற்றுப்பய ணத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ப.கோபி, திமுக பொங்க லூர் ஒன்றியச் செயலாளர் பி.அசோ கன், மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் க.முத்துரத்தினம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.சின்னச் சாமி, கொமதேக ஒன்றியச் செய லாளர் எஸ்.துரைசாமி, உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றியத் தலைவர் கே.ஜி.ஈஸ்வரமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் சிவசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஜி.சம்பத், பவித்ராதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.