திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்த கோட்டை பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் போது சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் காளைமாடு கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்தது. அதைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய நிர்வாகிகள் பூபாலன், சங்கர் மற்றும் பழனி ஆகியோர் மீது வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதைக் கண்டித்து வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் ஊர் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.