tamilnadu

ஆலங்குளத்தில்  ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி, மார்ச் 7- ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கில் இருந்து புதுப்பட்டி செல்லும் சாலையில் தனியார் ரைஸ்மில் ஒன்று  உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் துர்நாற்றம்  வீசுவதாக ஆலங்குளம் போலீசாருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு உள்ள இரும்பு வேலி அருகே சுமார்  50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. அவர் அரைநிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஆலங்குளம் வி.ஏ.ஓ. ரமேஷ் மற்றும் தலையாரி முருகன் ஆகியோர் சம்பவ  இடத்திற்கு வந்தனர்.  முதற்கட்ட விசாரணையில் அவர் 3 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் புழு அரித்த நிலையில் உள்ளது. மேலும் வெயிலினால் அவரது கால்  தசைகள் வெடித்து காணப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே மதுபானக்கடை உள்ளது. இதனால் அவர்  மது குடித்துவிட்டு மது போதையில் இரும்பு வேலியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது நண்பர்களுடன் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டா ரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.