tamilnadu

img

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 100 குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்...

திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் வடக்குப் பகுதிகச்சனம் கடை தெருவில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 100 குடும்பத்தினர் இணையும் விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.சேகர், பி.மாதவவேலன் தலைமை வகித்தனர். கட்சியில்இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் கொடியினை மாநிலக் குழுஉறுப்பினர் வி.மாரிமுத்து ஏற்றி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம்,ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன் கட்சி யில் இணைந்தவர்களை வாழ்த்தினர்.