tamilnadu

img

இலங்கை படையினரால் தாக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவி

மயிலாடுதுறை, மார்ச் 2-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் (42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (40), அருண் குமார் (27), மாதவன் (36), முருகன் (55) கார்த்திக் (32) ஆகியோர் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலை சேதப்படுத்தி இரும்பு பைப்பால் தாக்கப்பட்டு படகில் இருந்த மீன்பிடி சாதனங்கள் எடுத்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த 6 மீனவர்களும் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பி னர். இந்நிலையில், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் மீனவர்களை அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று நலம் விசாரித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.