tamilnadu

img

மின்கசிவினால் தீக்கிரையானது வீடு பல லட்ச ரூபாய் பொருட்கள் நாசம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மின்கசிவினால் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாச மானது. கறம்பக்குடி அருகே குழந்திரான்பட்டு கிராமத்தில் உள்ளது ராமசாமி மகன் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வீடு. இரவது மனைவி இந்திராகாந்தி, மகன் ஆனந்த ஆகியோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் ரவிச்சந்திரன் மட்டும் புதன்கிழமை தனியாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை மதியம் மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினா விரைந்துவந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.  இந்த தீ விபத்தில் பல லட்சரூபாய் மதிப்புள்ள நகை,  பணம், ஆவணங்கள் மற்றும் பொருட்கள் .எரிந்து நாசமானது. தீ விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி யில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கறம்பக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.