tamilnadu

img

நெல் கொள்முதல் எடைக் குறைவு இழப்பு தொகையை அரசே ஏற்க வேண்டும்

திருவாரூர், மார்ச் 3-  நிர்வாகத்தின் அலட்சி யத்தால் ஏற்படக்கூடிய எடை குறைவிற்கு கொள் முதல் ஊழியர்கள் இயக்க இழப்பு தொகையை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை 48 மணி நேரத் தில் கிடங்குக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 2013-2015 பருவ கால ஊழியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியு றுத்தி தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட முதுநிலை மண்டல அலுவ லகம் முன்பு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மண்டல தலை வர் சி.ஆர்.அண்ணாதுரை தலைமை வகித்தார். மண்டல கௌரவ தலைவர் கே.கே.ஜோதிபாசு, மாநில பொது செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், மாநில துணை பொதுச்செயலாளர் ஆர்.மோகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், தலைவர் எம்.கே.என்.அனிபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.