tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

சாலை விபத்தில் வாலிபர் பலி 


தஞ்சாவூர், ஏப்.5-பேராவூரணி அருகே புனல்வாசல் வாடிக்காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ரமேஷ்(44), திருச்சிற்றம்பலம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார்.வியாழக்கிழமை இரவு திருச்சிற்றம்பலத்தில் இருந்து புனல்வாசல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் ரமேஷ்சென்று கொண்டிருந்தார். அப்போது துறவிக்காடு அருகேஎதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


4 நாட்கள் மதுக்கடைகள் மூடல் 


தஞ்சாவூர், ஏப்.5-தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்றவிடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் தேர்தலையொட்டி மூடப்படும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஏப்-16, 17, 18 மற்றும்மே-23 ஆகிய தேதிகளில் மூடப்படும். இந்நாட்களில் மதுபானம் விற்பனை செய்யப்படமாட்டாது என தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.



;