tamilnadu

தஞ்சாவூர் ,சீர்காழி,அரியலூர் முக்கிய செய்திகள்

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம்

வி.ஏ.ஓ. கைது  

தஞ்சாவூர், ஜூலை 3- தஞ்சாவூர் மாவட்டம்‌ ஒரத்தநாடு வட்டம்‌ சென்‌னிய விடுதியை சேர்ந்தவர்‌ பாஸ்கர்‌ (37). இவர் பட்‌டுக்கோட்டை தாலுகா இடையாத்தி தெற்கு கிராம வி.ஏ.ஓ. வாக பணி யாற்றி வருகிறார்‌. இந்நிலையில்‌ இடையாத்தி வடக்கு கிரா மத்தை சேர்ந்த விவசாயி நடராஜன்‌(32) என்பவர்‌ பட்டா மாற்றம்‌ செய்வதற்காக கடந்த மாதம்‌ 21-ம்‌ தேதி ஆன் லைனில்‌ பதிவு செய்‌தார்‌.  இதையடுத்து வி.ஏ.ஓ., பாஸ்கரை சந்தித்து பட்டா மாற்றம்‌ செய்வதற்காக விண்ணப்பித்துள்ளேன்‌. வி.ஏ.ஓ., அனுமதிக்காக தங்களிடம்‌ வந்துள்ளதாக தெரிவித்தார்‌. பின்னர்‌ விண்ணப்பம்‌ செய்த நகல்‌களை கொடுத்து விரைந்து பட்டா மாற்றம்‌ செய்து கொடுக்குமாறு கூறினார்‌. அப்போது பட்டா மாற்றம்‌ செய்து கொடுக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம்‌ கொடுக்க வேண்‌டுமென பாஸ்கர்‌ கேட்டுள் ளார்‌.  அதற்கு விவசாயி, நான்‌ ஏழ்‌மையானவன்‌, என்னிடம்‌ பணம்‌ இல்லையென  கூறினார்‌. ஆனால்‌ கட்டாயம்‌ பணம்‌ வேண்டுமென பாஸ்கர்‌ கூறியுள்ளார். இதையடுத்து, நட ராஜன் கடந்த சில நாட்களாக வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு சென்றும்‌ எந்த பயனும்‌ இல்லை.  இதைத்தொடர்ந்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை ‌யின‌ரிடம் நடராஜன்‌ புகார்‌ செய்ததன் பேரில்‌ ரசாயனம்‌ தடவிய 2000 ரூபாய் நோட்டை நடராஜனிடம்‌ கொடுத்து, பாஸ்கரிடம்‌ கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறி னர்‌. இதன்படி 2 ஆயிரம் ரூபாயுடன் வி.ஏ.ஓ., பாஸ்கரை செல்போனில்,‌ நடராஜன்‌ தொடர்பு கொண்டார்‌. அப்போது இடையாத்தி தெற்கு அலுவலகத்தில்‌தான்‌ இருக்கிறேன்.‌ வாருங்கள்‌ என்று பாஸ்‌கர்‌ கூறினார்‌. ஆனால்,‌ அங்கு சென்று பார்த்தபோது அவர்‌ இல்லை. இதையடுத்து பாஸ்கரை மீண்டும் தொடர்பு கொண்ட போது பட்டுக்கோட்டையில் கடை ஒன்றில் இருப்பதாக நிற்கிறேன்‌, அங்கு வாருங்கள்‌ என்றார்‌. அங்கு சென்று 2 ஆயி ரம் ரூபாயை பாஸ்கரிடம்‌ விவசாயி நடராஜன்‌ கொடுத்தார்‌. அப்போது அங்கு மறைந்திருந்த தஞ்சை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்‌.பி (பொ) மணிகண்‌டன்‌, தலைமையிலான‌ காவ லர்கள், வி.ஏ.ஓ. பாஸ்கரை பிடித்து பட்டுக்‌கோட்டை பயணி யர்‌ மாளிகையில்‌ பாஸ்கரிடம்‌ விசாரணை நடத்தினர்‌. பின்னர் பாஸ்‌கர்‌ கைது செய்யப்பட்டு, கும்பகோணம்‌ தலைமை குற்றவியல்‌ நீதித்துறை நடுவரும்‌, தனி நீதிபதி யான மாதவ ராமானுஜன் முன்னிலையில்‌ ஆஜர்படுத்தப் பட்டார்‌. இதை தொடர்ந்து, வி.ஏ.ஓ., பாஸ்கரை 15 சிறை யில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 

மாதானம்-கடவாசல்  சாலையில் விரிசல்

சீர்காழி, ஜூலை 3- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதா னம் கிராமத்திலிருந்து கடவாசல் கிராமத்திற்குச் செல்லும் சாலையில், பச்சைபெருமாநல்லூரில் சாலையின் நடுவே விரிசல் ஏற்பட்டு உடையும் நிலையில் உள்ளது.  இந்த சாலையில், இலகு ரக வாகனங்கள் முதல், கன ரக வாகனங்கள் வரை அதிக எண்ணிக்கையில் சென்று கொண்டிருக்கின்றன. இரவு நேரங்களில் வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. சிதம்பரம் மற்றும் சீர்காழியிலி ருந்து புத்தூர், மாதானம் வழியாக திருமுல்லைவாசல் சென்று மீண்டும் திருமுல்லைவாசலுக்கு செல்லும் இந்த சாலையில் அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் சென்று கொண்டிருக்கின்றன.  வாகனங்கள் செல்லும்போது உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பாக சாலையின் விரிசலை சரி செய்ய வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலமானார்

தஞ்சாவூர், ஜூலை 3- தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து ஆசிரியர்கள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவரும், அறிவியல் அரங்கம் உள்ளிட்ட பல்வேறு அரங்கங்களில் பணியாற்றிய வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான தோழர் ஆழி ராம.அரங்கராஜன்(72) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம், நிர்வாகிகள் பி.செந்தில்குமார், அருளரசன், என். குருசாமி, சரவணன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

அரியலூரில் நாளை அம்மா திட்ட முகாம்

அரியலூர், ஜூலை 3- அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் ஏழா வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிரா மத்திலும் அம்மா திட்ட முகாம் ஜூலை 5 (வெள்ளிக் கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் பின்வரு மாறு நடைபெற உள்ளது. அரியலூர் வட்டத்தில் கோவிந்தபுரம், அருங்கால் ஆகிய கிராமங்களிலும் உடையார்பாளையம் வட்டத்தில் முத்துசேர்வாமடம், மணகெதி ஆகிய கிராமங்களிலும் செந்துறை வட்டத்தில் அசாவீரன்குடிகாடு கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் இலையூர் (கிழக்கு) கிராமத்தி லும் நடைபெறுகிறது.  இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாது காப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங் கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்(பொ) கா.பொற் கொடி தெரிவித்துள்ளார்.