திருச்சிராப்பள்ளி, மே 16-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள்சங்கம் சார்பில் சீதா வெங்கடேஷ் எழுதிய கீர்த்தனாவின் மோதிரம், முனைவர் மார்ட்டின் எழுதிய படிப்பது எதற்காக ஆகியபுத்தகங்களின் வெளியீட்டு விழா திருச்சி கலையரங்கத்தில் புதனன்று நடைபெற்றது. விழாவிற்கு தமுஎகச மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சோழ நாகராஜன், கவிஞர் மகாலட்சுமி, துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.புத்தகங்களை மாநிலக் குழு உறுப்பினர் இளங்குமரன் வெளியிட்டார். சீதா வெங்கடேஷ், மார்ட்டின் ஆகியோர் ஏற்புரையாற்றினர். முன்னதாக மாநகர பொருளாளர் நாகநாதன் வரவேற்றார். மாநகர செயலாளர் சிவ வெங்கடேஷ் நன்றி கூறினார்.