பொன்னமராவதி, நவ.2- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதியில் உள்ள ஸ்ரீ துர்க்கா மருத்துவமனை யில் 11 வது மருத்துவ மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சங்க செட்டிநாடு கிளையின் செயலாளர் காமாட்சி சந்திரன் தலைமை வகித்து மாத இதழை வெளியீட்டு தலைமைவுரையாற்றினார். பொருளாளர் மருத்துவர் நடேசன் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரைத்தார். மேலும் குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதலும் நினைவு பரிசும் வழங்கப் பட்டது. அருட்சகோதரி ச.ம.மரியபுஷ்பம் சிறப்புரையாற்றினார். மருத்துவர்கள் துரை.நவரத்னசாமி, மதியழகன், இராமனாதன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மருத்துவமனையின் மருத்துவர் நிவேதா காந்தி வரவேற்றார். மேலாளர் வெள்ளைச் சாமி நன்றி கூறினார். மருத்துவர் அழகேசன், மாத இதழின் விளக்கவுரை நிகழ்த்தி நன்றியை தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் சிவபாலன் கருப்பையா செய்திருந்தார்.