tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள்  ஆலோசனை முகாம்

 திருச்சிராப்பள்ளி, ஆக.5- திருச்சி மாவட்ட காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆலோ சனை முகாம் ஞாயிறு ஆர்சி பள்ளி அருகில் உள்ள நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் புஷ்பநாதன் தலைமை வகித்தார். இதில் டிஏஆஏடிடிஏசி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட காது கேளாதோர் நல முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, செயலாளர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில் காதுகேளாதோர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, காதொளி கருவி, வங்கி கடன், வேலை வாய்ப்பு, பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட் டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பி னர் நாகேந்திரன் நன்றி கூறினார்.