பெரம்பலூர், ஆக.30- தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் கே.ஜி வகுப்பில் பயிலும் மழலையர்களுக்கான மினி மாரத்தான் போட்டி மற்றும் வண்ணத்தாள்களில் பழங்கால சூழலை விளக்கும் உருவங்களை வடிவமைக்க பயிற்சி கொடுத்து விளக்கம ளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் முதல் 5 குழந்தைகள் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஆசிரியைகள் ஹேமா, சந்தி ரோதயம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.