திருச்சிராப்பள்ளி, மே 14-தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தின் வி.பி.சிந்தன் நினைவகம் கட்டிட திறப்பு விழாதிருச்சி செல்வநகர் விஸ்தரிப்பு கம்பர்தெருவில் திங்கட்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். சங்க நிர் வாகிகள் சிவகுமார், முருகேசன், சிங்கராயர், சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தோழர் வி.பி.சிந்தன் நினைவகம் கட்டிடத்தை சிஐடியு மாநில தலைவர்அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார்.சிஐடியு கொடியை சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் ஏற்றினார். கட்டிட கல்வெட்டை சம்மேளன துணைத்தலைவர் சந்திரன் திறந்து வைத்தார். விழாவில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், சம்மேளன துணைத்தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், பிச்சை,சிவக்குமார், சம்மேளன செயலாளர் ராஜாராம், சம்மேளன பொருளாளர் தயானந்தம், சிஐடியு திருச்சி மாநகர்மாவட்டத் தலைவர் ரெங்கராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், சிஐடியு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் அழகர்சாமி, சிஐடியு கரூர் மாவட்டச்செயலாளர் முருகேசன், புதுகை மண்டல பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், குடந்தை மண்டல பொதுச் செயலாளர் மணிமாறன், காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன், எஸ்இடிசி சம்மேளனக் குழு உறுப்பினர் ஜெயராமன், எஸ்இடிசி மத்திய சங்க செயலாளர் முத்துவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
கௌரவிப்பு
சங்க ஸ்தாபகர்களான மூத்த தோழர் முன்னாள் பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன் ஆகியோரை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். விழாவில் சங்க துணைத்தலைவர் கருணாநிதி, சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், சந்தானம், விஜயகுமார், பாலசுப்ரமணியன், முருகன், தியாகராஜன், ரமேஷ், சண்முகம், திருத்துவதாஸ், நீலமேகம், தங்கராசு, நடராஜன்,வீரமணி, மதியழகன், ஓய்வு பெற்றோர்நல அமைப்பு தலைவர் சின்னசாமி, செயலாளர் சண்முகம், ஏடிபி தலைவர் ரெங்கசாமி, பொதுச்செயலாளர்கள் ஏஐடியுசி சுப்ரமணியன், எம்எல்எப் செல்வராஜ், டிடிஎஸ்எப் பெருமாள், எல்பிஎப் குணசேகரன், எச்எம்எஸ் செல்வம், ஏஎல்எல்எப் இமானுவேல், ஐஎன்டியுசி தலைவர் துரைராஜ், பிடிஎஸ் ஆனைமுத்து, டிஎம்டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் சிஐடியு மாவட்டநிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சங்கபொதுச்செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். துணை பொதுச்செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.